பிரித்தானியா செல்வதற்காக இந்தியர் செய்த மோசடி: விமான நிலையத்திலேயே சிக்கினார்
பிரித்தானியா செல்வதற்கு விசா பெறுவதற்காக மோசடி வேலை ஒன்றைச் செய்த இந்தியர் ஒருவர், விமான நிலையத்திலேயே சிக்கினார்.
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட நபர்
நேற்று முன்தினம், இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த பட்டேல் (Umang Patel, 29) என்பவர், பிரித்தானியா செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்றுள்ளார்.
பிரித்தானிய விசா பெற்றிருந்த அவருடைய சான்றிதழ்களைப் பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகளுக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர், B.Tech சான்றிதழ் வைத்திருந்திருக்கிறார். ஆனால், விமான நிலைய அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவரால் திருப்திகரமான பதிலளிக்கமுடியவில்லை.
விசாரணையில் தெரியவந்த உண்மை
ஆகவே, அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில், தனது B.Tech சான்றிதழ் போலியானது என்பதையும், தான் சூரத்திலுள்ள ஏஜண்ட் ஒருவர் மூலம் அந்த சான்றிதழைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார் பட்டேல்.
அந்த போலி சான்றிதழைப் பயன்படுத்தியே, தான் பிரித்தானிய விசா பெற்றதாகவும் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள், அவரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |