ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டால்…பிரித்தானியாவில் மூன்று மணி நேர மின்தடை: ESO எச்சரிக்கை
பிரித்தானியாவின் சில பகுதிகளில் தேவைப்பட்டால் மூன்று மணி நேர மின்தடை.
நுகர்வோர்களுக்கு மின்தடை குறித்த அறிவிப்புகள் முன்னதாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.
எரிவாயு நெருக்கடியை அடுத்து குளிர்காலங்களில் தேவைப்பட்டால் மூன்று மணி நேர மின் தடை பிரித்தானியாவின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பிஎல்சியின் மின்சார அமைப்பு ஆபரேட்டர் வியாழனன்று எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ நெருக்கடியை தொடர்ந்து சமீபத்திய காலத்தில் பிரித்தானியாவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
getty
இந்நிலையில் குளிர்காலத்தில் வெப்பத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் எரிவாயு மற்றும் மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால், பிரித்தானியாவின் சில பகுதிகளில் மூன்று மணி நேர மின்வெட்டுக்கள் செயல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பிஎல்சியின் மின்சார அமைப்பு ஆபரேட்டர் (ESO) வியாழனன்று அறிவித்துள்ளார்.
இந்த மூன்று மணி நேர மின்வெட்டுக்களில் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு மின்தடை குறித்த அறிவிப்புகள் முன்னதாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பருவ மாற்ற நெருக்கடியை பொதுமக்கள் சமாளிப்பதற்கு உதவுவதற்காக வணிக நிறுவனங்களுக்கான மின்சாரத்திற்கு MWh ஒன்றுக்கு £211 உச்ச வரம்பாகவும், எரிவாயுவுக்கு MWh ஒன்றுக்கு £75 உச்ச வரம்பாகவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது இருந்தது.
sky
கூடுதல் செய்திகளுக்கு: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி: 9 ஓட்டங்களில் தோல்வியை தழுவியது இந்திய அணி
மேலும் ரஷ்ய எரியாவு பொருட்களை பிரித்தானியா நம்பி இருப்பதை குறைப்பதற்கான திட்டத்தையும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
bbc