பிரித்தானியாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு இந்த நாளில் வரலாம்! வானிலை ஆய்வாளர்கள் தகவல்
பிரித்தானியாவில் இன்னும் 15 நாட்களுக்குள் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நிகழலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பிரித்தானியாவில் அக்டோபர் மாத இறுதிக்குள் வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப ஏற்கனவே இரவு நேரங்களில் காற்றில் குளிர்ச்சியுடன் வெப்பநிலை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
பிரித்தானிய வானிலை மைய அரிக்கியின்படி, இந்த வாரம் ஸ்காட்லாந்தின் வடமேற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட குளிர்ந்த காற்று மிட்லாண்ட்ஸ் வரை கீழே தள்ளப்படுவதைக் காணலாம், மேலும், லண்டன் போன்ற பகுதிகள் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைவதை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வரும் வாரங்களில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Credit: Alamy Live News
Netweather.tv படி, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரை முழுவதும் அக்டோபர் 24-ஆம் திகதி காலை 6 மணிக்கு பனி விழும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
அன்றைய நாளில் ஸ்காட்லாந்தின் வடக்கு எல்லைப் பகுதிகளில் பூஜ்ஜியத்துக்கும் (0) கீழ் அதிகபட்சமாக -1க்கும் கீழ் வெப்பநிலை குறியலாமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.