பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை! நாளை காத்திருக்கும் மோசமான பனிப்பொழிவு
பிரித்தானியாவில் நாளை (வியாழக்கிழமை) எலும்புகள் உறையும் அளவிற்கு பயங்கரமான பனிப்பொழிவு மற்றும் பனிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஒரு சில இடங்களில் நாளை -11 டிகிரி செல்ஸியஸ் பனிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், சில இடங்களில் 5 அங்குலம் வரை பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடுமையான வானிலையை எதிர்கொள்ள பிரித்தானியர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையுடன் கூடிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால், கடுமையான பனிப்பொழிவுக்கு முன், பிரித்தானியாவின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் "வெப்பம், குளிர் மழை" மற்றும் கடலோரப் புயல்களைத் தாங்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் சராசரி பகல்நேர வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 6 டிகிரி செல்சியஸ் மற்றும் இங்கிலாந்தில் 7 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஒரே இரவில் மிக குளிர்ச்சியாக இருக்கும் என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேற்கு லண்டன் மற்றும் ஹியர்ஃபோர்டில் வெப்பநிலை -2 செல்ஸியஸுக்கு வீழ்ச்சியடையும், ஆனால் மணிக்கு 30 மைல் வேகத்தில் வீசும் காற்று -11 செல்ஸியஸாக உணர வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பனி மற்றும் ஆலங்கட்டி மழை கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு இங்கிலாந்துக்கு பரவுவதற்கு முன்பு வடக்கு ஸ்காட்லாந்தை தாக்கும் என தெரிவித்துள்ளனர்.
முன்னறிவிப்பாளரின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியதாவது: “இன்று மிகவும் குளிராக இருக்கும், வடக்கில் மழை பெய்யும்.
அடுத்த சில நாட்களில் அதிக பனிப்பொழிவு ஏற்படுவதற்கு முன், சில மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளை கடுமையான மழை மற்றும் பனி பாதிக்கும். ஒரு சில பகுதிகள் மட்டுமே தவிர்க்கப்படும்" என்றனர்.