கைக்கு வந்த பல கோடிகளை இழந்த பிரித்தானிய இளம்தம்பதி! கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டோம் என துள்ளிகுதித்து ஏமாந்த பரிதாபம்
பிரித்தானியாவை சேர்ந்த இளம்தம்பதி தாங்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டோம் என நம்பிய நிலையில் அவர்களின் பெருங்கனவு நிஜமாகாமல் கனவாகவே முடிந்துள்ளது.
லியம் மெக்ரோஹன் (21) என்ற இளைஞனும், ரச்சேல் கென்னடி (19) என்ற இளம்பெண்ணும் காதல் தம்பதிகள் ஆவர். இருவரும் EuroMillions மூலம் ஒருநாள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும் என கனவில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் EuroMillions லக்கி எண்களை அவர்கள் தேர்வு செய்து விளையாடினர். அதன்படி தொடர்ச்சியாக ஐந்து வாரங்களுக்கு 6, 12, 22, 29, 33, 6, 11 எண்களை பெட்டிங் வைத்தனர்.
இந்த எண்களுக்கு அதிர்ஷ்டவசமாக £182m பரிசு விழுந்தது, தங்களுக்கு தான் பரிசு விழுந்தது என கருதி இருவரும் துள்ளி குதித்தனர். ஆனால் அங்கு தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது.
ஏனெனில் அந்த டிக்கெட்களை அவர்கள் வாங்கவே இல்லை என தெரியவந்தது. அதாவது அந்த டிக்கெட்களை வாங்க அவர்களின் கணக்கில் போதுமான பணம் இல்லாமல் இருந்திருக்கிறது.
இருவரும் வாரா வாரம் £2.50 கொடுத்து டிக்கெட்களை வாங்கியிருக்கிறார்கள், இதற்கான பணம் அவர்கள் கணக்கில் இருந்து கழிந்து கொண்டே வந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் ரச்சேல் அதிகம் ஆசைப்பட்டு அதிக முறை டிக்கெட்களை வாங்கியதால் அதிக பணம் கணக்கில் இருந்து சென்றிருக்கிறது. இதனால் தற்போது அவர்கள் தேர்வு செய்த எண்களுக்கு பரிசு விழுந்திருந்தாலும் அந்த டிக்கெட்களை அவர்கள் வாங்கவேயில்லை என தெரியவந்தது.
இதனால் அந்த பணத்தை அவர்கள் இழந்துள்லனர். இந்த ஏமாற்றம் குறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் மனம் உடைந்துவிட்டது. எங்களுக்கு பரிசு கிடைத்துவிட்டது என கருதி பலருக்கும் தகவல் சொன்னோம், பின்னர் தான் எங்களுக்கு இல்லை என தெரியவந்தது.
எங்கள் கனவு வீடு மற்றும் கனவு காரை வாங்குவது போது சித்தரித்துக் கொண்டிருந்தோம், எல்லாமே கனவாகவே முடிந்துவிட்டது.
இருந்த போதிலும் தொடர்ந்து விளையாடுவோம் என கூறியுள்ளனர். அந்த மிகப்பெரிய பம்பர் பரிசானது சுவிட்சர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.