பிரான்ஸ் ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து உக்ரைன் தொடர்பில் ஜேர்மனி எடுத்துள்ள முடிவு
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது, ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவது போலாகிவிடும் என்று கருதி, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி தயக்கம் காட்டிவந்தது.
பிரான்ஸ் ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து...
இந்நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், போலந்து பிரதமரான Donald Tusk ஆகியோரை நேற்று ஜேர்மன் தலைநகர் பெர்லினில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், உக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், உக்ரைனுக்கு உதவுவது தொடர்பில் வெளிப்படையாக பேசிவருகிறார்.
இந்நிலையில், மேக்ரான் மற்றும் போலந்து பிரதமரான Donald Tuskஉடனான சந்திப்பைத் தொடர்ந்து, ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ், அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், உக்ரைனுக்கு வழங்குவதற்காக, உடனடியாக ஆயுதங்களை வாங்க இருப்பதாக ஷோல்ஸ் தெரிவித்தார். உலக ஆயுதங்கள் சந்தையில் அந்த ஆயுதங்களை வாங்க இருப்பதாக தெரிவித்த ஷோல்ஸ், உக்ரைனில் இருக்கும் கூட்டாளர்களுடன் தாங்களும் ராணுவ ஆயுத உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.