ஜேர்மனியில் அணுமின் நிலையத்தின் விரிவாக்கம் நிராகரிப்பு: சுற்றுச்சூழல் அமைச்சர்
அணுமின் நிலைய விரிவாக்கம் தொடர்பாக ஜேர்மனிய அரசாங்கத்தின் உட்பூசல்கள் அதிகரித்து வருகின்றன
இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுட்காலத்தை வரும் குளிர்காலத்திற்கு அப்பால் நீட்டிக்க முடியாது - சுற்றுச்சூழல் அமைச்சர்
ஜேர்மனியில் எரிசக்தி நெருக்கடிக்கு இடையில் இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் முடிவை ஜேர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதரித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் ஜேர்மன் அரசாங்கம், அதன் அனைத்து அணுமின் நிலையங்களையும் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் மூட முடிவு செய்தது. ஆனால், உக்ரைனில் நடந்த போரின் காரணமாக ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட சரிவு, ஏப்ரல் வரை இரண்டு ஆலைகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசாங்கத்தை தூண்டியது.
இதனால் அணுமின் நிலைய விரிவாக்கம் தொடர்பாக ஜேர்மனிய அரசாங்கத்தின் உட்பூசல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதுதொடர்பான விவாதம் அதிகரித்தது. சுற்றுச்சூழல் ஆர்வல பசுமைவாதிகள் மற்றும் வணிக சார்பு சுதந்திர சனநாயகவாதிகள், ஆற்றல் நெருக்கடியை சமாளிக்க தங்கள் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுவது குறித்து சண்டை எழுந்தது.
அப்போது, இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுட்காலத்தை வரும் குளிர்காலத்திற்கு அப்பால் நீட்டிக்க முடியாது என்று சுற்றுச்சூழல் அமைச்சரான Steffi Lemke நிராகரித்தார். இதுதொடர்பாக Steffi Lemke வெளியிட்ட அறிக்கையில், 'வரவிருக்கும் குளிர்காலத்திற்கு அப்பால் இயங்கும் நேரத்தை நீட்டிக்க மற்றும் புதிய எரிபொருள் கூறுகளை தேவையான கொள்முதல் செய்வதை நான் நிராகரிக்கிறேன்' என தெரிவித்தார்.