ஜேர்மனி மீது உக்ரைன் கடுங்கோபம்: காட்டமான வார்த்தைகளை பயன்படுத்திய அமைச்சர்
உக்ரைனுக்கு அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் பயங்கர குண்டுகளைக் கொடுப்பதாக அறிவித்துள்ள விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்துள்ள நட்பு நாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் பயங்கர குண்டுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால், உக்ரைனுடைய நட்பு நாடுகளாக பிரித்தானியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளே, அமெரிக்கா உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தற்போது, ஜேர்மனியும், இந்த கிளஸ்டர் குண்டுகளை அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் கடுங்கோபம்
ஆனால், உக்ரைன் தரப்பு, தங்களுக்கு அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகளைக் கொடுப்பதை எதிர்க்கும் நாடுகள் மீது கடுங்கோபத்தில் உள்ளது.
ஜேர்மனியும் கிளஸ்டர் குண்டுகளைக் கொடுப்பதை எதிர்க்கும் நாடுகளுடன் இணைந்துள்ளதால் கோபமடைந்துள்ள உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சரான Andrey Melnik, காட்டமான வார்த்தைகளால் ஜேர்மனியை விமர்சித்துள்ளார்.
ஜேர்மனியின் எதிர்ப்பை ட்விட்டர் செய்தி ஒன்றில் வெளிப்படுத்திய ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரான Ralf Stenger என்பவரை, நீ நரகத்துக்குப் போ என காட்டமாக விமர்சித்துள்ளார் Andrey.
கிளஸ்டர் குண்டுகள் என்பவை என்ன?
இந்த கிளஸ்டர் குண்டுகள் என்பவை, வீசப்பட்டதும் வெடித்து மேலும் பல சிறிய குண்டுகளை வெளிப்படுத்த, அவை பல இடங்களில் விழுந்து பயங்கரமாக வெடித்துச் சிதறும்.
பிரச்சினை அத்துடன் முடிவதில்லை. விழுந்து வெடிக்காத குண்டுகளும் பிற்காலத்தில் பெரிய ஆபத்தை உருவாக்கும், காரணம், அந்த குண்டுகளைக் கண்டுபிடிப்பதும் கடினமாகும். மேலும், இந்த பயங்கர குண்டுகளைப் பயன்படுத்த சர்வதேச அளவில் தடையும் உள்ளது.
ஆகவேதான், ஜேர்மனியும், அமெரிக்கா இந்த கிளஸ்டர் குண்டுகளை உக்ரைனுக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |