போர்க்களத்துக்குத் திரும்பும் உக்ரைன் பெண்: பின்னணியில் ஒரு துயரச் செய்தி
கனடாவுக்கு அகதியாக வந்த உக்ரைன் பெண் ஒருவர், உக்கிரமாக போர் நடந்து வரும் உக்ரைனுக்குத் திரும்பிச் செல்கிறார்.
கனடா கனவிலிருந்த உக்ரைனியர்
உக்ரைன் ரஷ்யப் போர், ஏராளம் குடும்பங்களைப் பிரித்து சின்னாபின்னமாக்கிவிட்டது. பிள்ளைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், கணவனை இழந்த பெண்களுமாக ஏராளம் பேர் வேதனையில் அவதியுற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் போர் முடிந்தபாடில்லை! உக்ரைன் நாட்டவரான Andrii Sidorchenko |(35)க்கு கனடாவில் தன் குடும்பத்துடன் வாழ்வது நீண்ட நாள் கனவு.
வெல்டிங் தொழில் செய்துவந்த அவர் கனடாவுக்கு வந்து அதே தொழிலைச் செய்ய விரும்பியுள்ளார்.
(Submitted by Hanna Sidorchenko)
ஆனால், அவரது கனவு நிறைவேறுவதற்கு இடையூறாக போர் வந்துவிட்டது. ஆகவே, Andriiயின் மனைவியான Hanna Sidorchenkoம், தம்பதியரின் மகனான Rostyslavம் கனடாவின் வின்னிபெக்கை வந்தடைய, Andrii நாட்டைக் காப்பதற்காக போரில் பங்கேற்றார்.
கிடைத்த துயரச் செய்தி
இந்நிலையில், இம்மாதம் 5ஆம் திகதி, Hannaவுக்கு ஒரு துயர செய்தி கிடைத்தது. ஆம், அவரது கணவரான Andriiயும் அவரது சக வீரர்களும் உக்ரைனின் Bakmhut நகரில் நடந்த போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் அந்த செய்தி.
(Submitted by Hanna Sidorchenko)
எப்படியும் கணவன் கனடாவுக்கு வந்துவிடுவார், அவரது ஆசைப்படியே கனடாவில் குடும்பமாக சேர்ந்து வாழலாம் என்னும் Hannaவின் கனவு தகர்ந்துபோனது. நேற்று, வெள்ளிக்கிழமை, Hannaவும் அவரது தோழியான Oksana Lazarenkoவும் உக்ரைனுக்குப் புறப்பட்டுள்ளார்கள்.
போர்க்களத்துக்குச் சென்று, தன் கணவர் உடலை மீட்டு, அவருக்கு இறுதிச்சடங்கு செய்வது Hannaவின் திட்டம். கனடாவில் வாழ ஆசைப்பட்ட கணவரின் அஸ்தியை எப்படியாவது கனடாவுக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்பதற்காக, போர்க்களத்துக்குப் புறப்பட்டுள்ளார் Hanna!
(Tyson Koschik/CBC)