போருக்கு மத்தியில் ஜேர்மனிக்கு வந்துள்ள உக்ரைன் படைவீரர்கள்... காரணம் இதுதான்
உக்ரைனில் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் படையினர் சிலர் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள்.
60 உக்ரைன் வீரர்கள் போருக்கு மத்தியில் மேற்கு ஜேர்மனியை வந்தடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..
அவர்கள் வந்த நோக்கம் என்னவென்றால், ஜேர்மனி உக்ரைனுக்கு உதவியாக ஏழு தானியங்கி howitzer 2000 என்னும் ஆயுதங்களை வழங்க உள்ளது. ஆனால், அந்த ஆயுதங்களை உடனடியாக யாரும் பயன்படுத்திவிடமுடியாது. அதற்கு முறையான பயிற்சி வேண்டும்.
ஆகவேதான், அந்த howitzer 2000 ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வதற்காக அந்த 60 உக்ரைன் வீரர்களும் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள்.
அந்த 60 படைவீரர்களுடன், தொழில்நுட்பக் கலைஞர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் வந்துள்ளார்கள்.
இந்த பயிற்சி சுமார் 40 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
அதற்குப் பிறகு, அந்த howitzer 2000 ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஜேர்மன் தயாரிப்பான இந்த howitzer 2000 ஆயுதம் ஒன்றைப் பிரயோகிக்க, ஐந்து படைவீரர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.