குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உளுந்து புட்டு: எப்படி செய்வது?
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 கப்
- அரிசி- ½ கப்
- தேங்காய்- 1
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை- ¾ கப்
- நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் உளுந்து மற்றும் அரிசியை பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து சலித்து கொள்ளவும்.
பின் இந்த மாவில் தண்ணீர் சேர்த்து புட்டு மாவு போல் உதிரி உதிரியாக பிணைந்து கொள்ளவும்.

அடுத்து இதனை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வேகவைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் நெய், நாட்டுச்சர்க்கரை, தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறினால் உளுந்து புட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |