ஐ.நா நீதிபதி ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை: விவரம் செய்திக்குள்
ஐ,நா குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிபதியாக இருந்த ஒரு பெண்ணுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா நீதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை
லிடியா முகம்பே (50), ஐ,நா குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிபதியாக இருந்தவர். உகாண்டாவில் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்துள்ளார் அவர்.
லிடியா பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலையில் முனைவர் பட்டப்படிப்பு பயின்றுள்ளார்.
அவர் பட்டப்படிப்பு படிக்கும்போது, தனக்கு வேலை செய்வதற்காக உகாண்டா நாட்டவரான இளம்பெண் ஒருவரை தன்னுடன் பிரித்தானியாவுக்கு அழைத்துவந்துள்ளார்.
பிரித்தானியாவின் நிலையான வேலை எதையும் செய்யவிடாமல், அந்த இளம்பெண்ணை தனக்கு அடிமையாக வைத்துள்ளார் லிடியா.
இந்த வழக்கு மார்ச் மாதம் நீதிமன்றம் வந்த நிலையில், தற்போது லிடியாவுக்கு ஆறு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய புலம்பெயர்தல் சட்டத்தை மீறியது, துஷ்பிரயோகம் செய்யும் நோக்கில் ஒருவரை பிரித்தானியாவுக்கு பயணப்பட வைத்தது, வேலை செய்ய கட்டாயப்படுத்தியது மற்றும் சாட்சியை அவமதிக்க திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் லிடியா மீது சுமத்தப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பெண் உகாண்டாவுக்கு திரும்பிச் செல்ல இயலாது என்பதால், அவருக்கு பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |