80,000 ராக்கெட்டு குண்டுகள்... உக்ரைனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கனடா
உக்ரைன் - ரஷ்யா போர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவை அடுத்து கனடாவும் உக்ரைனுக்கு ராக்கெட்டு குண்டுகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர்
கனடா தம்மிடம் உள்ள ராக்கெட்டு குண்டுகளில் 80,840 எண்ணிக்கையை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அத்துடன், ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் 1300 ஆபத்தான கருவிகளையும் உக்ரைனுக்கு அனுப்ப உள்ளது.
குறித்த தகவலை கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஜூன் மாதம் 2,160 ராக்கெட்டு குண்டுகளை கனடா உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
கனடா அனுப்பியுள்ள CRV7 ராக்கெட்டு குண்டுகளானது உயிரியல் அல்லது அணு ஆயுதங்களை பொருத்தக்கூடியது என்றும், குறித்த குண்டுகளால் டாங்கிகள், கட்டிடங்கள் அல்லது ராணுவ வீரர்கள் மீதும் தாக்குதலை நடத்த முடியும் என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய நெருக்கடி இது
மட்டுமின்றி, 64 Coyote கவச வாகனங்கள் உட்பட பல்வேறு ஆயுதங்களை கனடா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா ஊடுருவலை முன்னெடுத்ததன் பின்னர் சுமார் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இராணுவ உதவிகளை முன்னெடுக்க கனடா உறுதி அளித்திருந்தது.
ஆகஸ்டு 6ம் திகதி ரஷ்யாவுக்குள் அதிரடியாக உக்ரைன் ஊடுருவலை முன்னெடுத்த பின்னர் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அடிக்கடி தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறது. மேலும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், ரஷ்யா எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடி இதுவென்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |