விவாகரத்து நம்பமுடியாத அளவுக்கு வேதனையாக இருந்தது.. உலக கோடீஸ்வரரின் முன்னாள் மனைவி
திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் 2021 மே மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இருவரும் இணைந்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் ஃபார்ச்சூன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் "முன்னாள் கணவர்" பில் கேட்ஸுடன் விவாகரத்து பற்றி திறந்துள்ளார்.
திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் 2021 மே மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனால், இது ஆகஸ்ட் 2021-ல் இறுதி செய்யப்பட்டது.
58 வயதான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தனது நேர்காணலில், "என்னால் அந்த திருமண வாழ்க்கையில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதற்கு சில காரணங்கள் இருந்தன" என்று கூறினார்.
அதேசமயம், "இது எண்ணற்ற வழிகளில் நம்பமுடியாத அளவிற்கு வேதனையை அளித்தது, ஆனால் அதைக் கடந்து செல்ல எனக்கு தனியுரிமை இருந்தது" என்று அவர் கூறினார்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஜோடிக்கு ஜெனிஃபர் (25), ரோரி (23) மற்றும் ஃபோப் (19) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த விவாகரத்துக்கு இடையில் என் குழந்தைகளை பாதுகாப்பது எனது முக்கிய கவலையாக இருந்தது என்று ஃப்ரெஞ்ச் கேட்ஸ் ஃபார்ச்சூனிடம் கூறினார்.
இருவரும் இணைந்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அவர் மேலும் கூறுகையில், "நான் விலகிச் செல்லும் நபருடன் தொடர்ந்து பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் நான் எனது சிறந்த சுயத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, நான் காலை 9 மணிக்கு அழுதாலும், 10 மணிக்கு நான் அவருடன் வீடியோ கான்ஃபரன்ஸில் இருக்க வேண்டும் என்றாலும், நான் அதில் பங்கேற்று என் சிறந்த பங்களிப்பை தர வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக, CBS உடனான மார்ச் மாத நேர்காணலில், பிரஞ்சு கேட்ஸ் அவரும் அவரது முன்னாள் கணவரும் ஒருவருக்கொருவர் "நட்பாக" இருப்பதாகவும், தொழில்முறை உறவுகளைப் பேணுவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .