இங்கிலாந்தில் 200 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு... விமானங்கள் பறக்க தடை
இங்கிலாந்தில் வெடிக்காத இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இங்கிலாந்திலுள்ள Goole என்ற நகரில், கட்டுமானப் பணிக்காக பணியாளர்கள் பள்ளம் தோண்டும்போது, 200 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், அப்பகுதியிலுள்ள வீடுகளிலிருப்போர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. M62 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு மேல் விமானங்கள் பறக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்துக்கு சற்று தொலைவில் உள்ள மக்களும் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இன்று அந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர்கள். 200 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.