கணவனால் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்ணின் டைரியிலிருந்த அந்த வார்த்தைகள்
கிரீஸ் தீவில் கணவரால் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்ணின் டைரியில் எழுதப்பட்டிருந்த விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிரீஸ் தீவில், தன் கணவரான பாபிஸ் (33) மற்றும் தனது 11 மாத குழந்தையுடன் வாழ்ந்துவந்த பிரித்தானிய பெண் கரோலின் (20). கடந்த மாதம் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியின்போது தன் மனைவியைக் கொன்றுவிட்டதாக தெரிவித்திருந்தார் பாபிஸ்.
ஆனால், தொழில்நுட்ப தடயவியல் நிபுணர்கள் பாபிஸ் பொய் சொல்வதைக் கண்டுபிடித்தார்கள். தான் வசமாக சிக்கிக்கொண்டதை புரிந்துகொண்ட பாபிஸ், தனக்கும் கரோலினுக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது கரோலின் தன்னை முட்டாள் என்று அழைத்து வீட்டை விட்டு வெளியே போகச்சொல்ல, கோபத்தில் அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதாகவும், அதில் அவர் இறந்துபோனதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பொலிசாரிடம் கரோலினின் டைரி ஒன்று சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியுள்ள விடயங்களை பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கர்ப்பிணியாக இருந்த கரோலின், மீண்டும் பாபிஸுடன் சண்டை, இம்முறை மோசமான சண்டை என்று எழுதியிருக்கிறார். நான் அவரை அடித்தேன், சபித்தேன், அவர் கதவை உடைத்தார்.
நடந்தது என்னவென்றால், நான் கண் விழிக்கும்போது எப்படி இருந்தேன் தெரியுமா என்று மட்டுமே அவரிடம் கேட்க விரும்பினேன் அவ்வளவுதான், உண்மையில், நான் விழிக்கும்போது அவ்வளவு களைப்பாகவும் பலவீனமாகவும் இருந்தேன்... நான் இங்கிருந்து போக விரும்புகிறேன்.
என் அக்கா வீட்டுக்கு போகலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இப்படியே பாபிஸுடன் ரொம்ப நாள் சமாளிக்க முடியாது. எங்களுக்குள் உள்ள உறவு என்னை காயப்படுத்தினாலும், என்னால் அவரை விட்டுப் பிரிய முடியவில்லை, ஏனென்றால், நான் அவரை அவ்வளவு நேசிக்கிறேன்.
பின்னர் ஒரு முறை இப்படி எழுதியிருக்கிறார் கரோலின்... ஹார்மோன் பிரச்சினையால் சோர்ந்துபோயிருந்தேன், அதனால் பாபிஸுடன் சண்டை. நான் அவரைப் பார்த்து கத்தினேன், அவரை அடித்தேன், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று அவரிடம் கூறினேன்.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம், கரோலின் பாபிஸ் தம்பதியரின் மகள் லிடியா பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில், இப்படி எழுதியிருக்கிறார் கரோலின்... இன்றுடன் என் மகள் பிறந்து ஒரு மாதம் ஆகிறது, இன்றுதான் நான் உங்களைப் பிரிய விரும்புகிறேன் என்று பாபிஸிடம் கூறினேன்... ஆனால், இந்த விடயங்களை டைரியில் எழுதிய கரோலின் தன் குடும்பத்தினரிடம் கூட இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை போலிருக்கிறது.
அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் ஒருவேளை அவர் இன்று உயிருடன் இருந்திருப்பாரோ!