பிரித்தானியாவில் பொலிஸை பார்த்த பீதியில் இளைஞர் செய்த காரியம்! அனுபவிக்கவுள்ள தண்டனை
பிரித்தானியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமால் பொலிஸை பார்த்த பயத்தில் அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்ற இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டிரேஸி ஹெர்குலிஸ் (Tracy Hercules)(22) என்ற நபர் கடந்த மார்ச் 8-ஆம் திகதி Lincolnshire-ல் உள்ள Spalding அருகில் ஒரு சாலையில் சற்று வேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக நீல நிற விளக்குடன் வந்த ஒரு பொலிஸ் காரை பார்த்ததும் படுவேகமாக காரை ஒட்டிச் சென்றுள்ளார்.
சந்தேகமடந்த பொலிஸார் அந்த காரை விரட்டியுள்ளனர். மணிக்கு 60 மைல் ஸ்பீட் லிமிட் கொண்ட அந்த சாலையில் 110 மைல் வேகத்தில் பறந்த அந்த கார், 25 நிமிடமாக பொலிஸிடமிருந்து தப்பிக்க முடியாத நிலையில் ஒரு பள்ளத்தில் இறங்கி சேற்றில் மாட்டி நின்றது.
இதில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பலமுறை போக்குவரத்து விதிகளை மீறியதற்காவும், பொதுமக்களை அச்சுறுத்தியதற்காகவும் காரை ஓட்டிவந்த ஹெர்குலிஸை கைது செய்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரை விசாரித்ததில், 22 வயதான ஹெர்குலிஸ் இன்னும் ஓட்டுநர் உரிமம் பெறவில்லை என்பது தெரிவந்தது. அவர் தன்னிடம் லைசன்ஸ் இல்லாததால் பொலிஸ் வாகனத்தைக் கண்ட பீதியில் காரை வேகமாக ஓட்டிச்சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. தனது உயிருக்கு மட்டுமின்றி, பொலிஸார் உயிருக்கும் பொதுமக்கள் உயிருக்கும் பங்கம் விளைவிக்கும் விதமாக வாகனம் ஒட்டியதற்காக, ஹெர்குலிசுக்கு 8 மாதம் சிறை தண்டனையும், அடுத்த 22 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.