'அனைவருக்கும் இலவச தடுப்பூசி' இரண்டு இந்திய மாநிலங்கள் அதிரடி அறிவிப்பு!
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்காப்படும் என அசாம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் அறிவித்துள்ளன.
வரும் மே 1-ஆம் திகதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அசாம் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அசாம் மாநில அரசு கடந்த ஆண்டு 'அசாம் ஆரோக்கிய நிதி' என்ற சுகாதார திட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட்ட நிதியிலிருந்து அதன் இலவச தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.
அதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 1 கோடி Covaxin தடுப்பூசி டோஸ்களை ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், உத்தர பிரதேசத்தில் வரும் மே 1-ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், அன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.