கையும் களவுமாக சிக்கிய திருமணமான பெண்: கட்டிடத்தின் மேலிருந்து குதித்ததால் பரபரப்பு
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், ஹொட்டல் அறை ஒன்றில் வேறொரு நபருடன் கையும் களவுமாக சிக்கிய திருமணமான பெண்ணொருவர், கட்டிடத்தின் கூரையிலிருந்து குதித்து தப்பியோடிய விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கையும் களவுமாக சிக்கிய திருமணமான பெண்
உத்தரப்பிரதேசத்திலுள்ள Baraut என்னுமிடத்திலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு தன் காதலரான Shobhit என்பவருடன் வந்துள்ளார் ஒரு பெண்.
விடயம் என்னவென்றால், அவர் ஏற்கனவே திருமணமானவர். தன் மனைவி வேறொரு நபருடன் நடமாடுவதாக தகவல் கிடைத்ததும், தனது குடும்பத்தினருடன் அந்த ஹொட்டலுக்கு வந்துள்ளார் அந்தப் பெண்ணின் கணவர்.
கணவரைக் கண்டதும், சுமார் 12 அடி உயரமுள்ள அந்த ஹொட்டலின் கூரையிலிருந்து குதித்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அவரது காதலரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகிறார்கள். அந்தப் பெண் ஹொட்டலிலிருந்து குதிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக மனைவிகளால் கணவன் கொல்லப்படும் செய்திகளும், திருமணமாகி ஒரே வாரத்தில் கணவனை விட்டு ஓட்டம் பிடித்த பெண்கள் குறித்த செய்திகளும் வெளியாகிவரும் நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாம் என்பதற்காக பொலிஸ் பாதுகாப்புக் கோரியுள்ளார் அந்தக் கணவர்.
இந்த தம்பதிக்கு 2019இல் திருமணமாகியுள்ளது. ஒரு மகனும் இருக்கிறான். இந்நிலையில், திருமணத்துக்கு முன் தன் மனைவி நெருங்கிப் பழகிவந்தவர்களுடன், திருமணமானபின்பும் பழகிவந்ததாகவும் அந்தக் கணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே இந்த தம்பதியர் திருமண பிரச்சினைகளுக்காக மன நல ஆலோசனை பெற்றுவந்துள்ளார்கள்.
ஆலோசனை நேரம் முடிந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பெண் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிப் போவதைக் கண்டதால்தான் அவரது கணவரும் உறவினர்களும் அவரைப் பின்தொடர்ந்துள்ளார்கள்.
ஹொட்டலிலிருந்து அந்தப் பெண் தப்பியோட, அவரது காதலர் மட்டும் சிக்கிக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |