சுவிஸ் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்: உயிர் பலி வாங்கிய சலுகை

By Balamanuvelan Aug 14, 2024 05:41 AM GMT
Report

பிரித்தானியாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கொலை வழக்கில், அவரைக் கொலை செய்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தும், அவரது மருத்துவர்கள் அதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தற்போது சுவிட்சர்லாந்தில் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதால் ஒரு உயிர் பலியாகியுள்ளது.

வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட நோயாளி

2005ஆம் ஆண்டு, paranoid schizophrenia என்னும் பிரச்சினை உட்பட பல மன நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் தனது சகோதரரை கொடூரமாகத் தாக்கியதற்காக பேசலிலுள்ள மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2014ஆம் ஆண்டு மருத்துவமனையிலிருந்து தப்பிய அவர், இரண்டு பெண்களைக் கொலை செய்துவிட்டார். 2015ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு மீண்டும் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்.

சுவிஸ் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்: உயிர் பலி வாங்கிய சலுகை | Upk To Handle Basel Murder Case Externally

ஆனால், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவருக்கு மருத்துவமனையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில், ஒரு ஊழியர் உடன் வர, அவர் மருத்துவமனை வளாகத்தில் உலாவ அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு, தனியாகவே கொஞ்சம் நேரம் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர் பலி வாங்கிய சலுகை

ஆனால், வியாழக்கிழமை தனியே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த நபர், மீண்டும் ஒரு 75 வயதுப் பெண்ணை கொலை செய்துவிட்டார்.

வெள்ளிக்கிழமை மதியம் பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டும், அவரை தனியாக வெளியே செல்ல மருத்துவமனை அனுமதித்துள்ளது.

விளைவு? அவருக்கு அளிக்கப்பட்ட சலுகையால் மீண்டும் ஒரு உயிர் பலியாகிவிட்டது.

மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஒருவரை வெளியே செல்ல அனுமதிக்கவேண்டுமானால், அவரது மருத்துவர்கள் அவரை முழுமையாக பரிசோதித்து, அவரை வெளியே விடுவதால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என உறுதியானால்தான் அவரை வெளியே விடவேண்டும்.

ஆனால், பலமுறை குற்றச்செயல்களில் ஈடுபட்ட, அதுவும் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை, மருத்துவர்கள் தனியாக வெளியே செல்ல அனுமதித்துள்ளார்கள். அவர் மீண்டும் ஒருவரைக் கொலை செய்துவிட்டார்.

ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US