2024-ம் ஆண்டிற்கான UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு.., தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தது யார்?
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC ) சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
UPSC தேர்வு முடிவுகள்
வெளியீடு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி (UPSC ) சிவில் சர்வீஸ் தேர்வினை நடத்துகிறது. இந்த தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் 1000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவர் முதலிடத்தையும், ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாம் இடத்தையும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |