12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த பொலிசார்
பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் வாகனம் மோதி கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
கோவென்ட்ரி பகுதி ராட்ஃபோர்ட் சாலையில் வெள்ளிக்கிழமை தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுவன் Keaton Slater மீது கார் ஒன்று மோதியதில், சிறுவன் மரணமடைந்துள்ளான்.
இந்த விவகாரத்தில் தற்போது 21 வயது Dolars Aleksanders என்பவரை அடையாளம் கண்டுள்ள பொலிசார், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் நடந்த 4.30 மணியளவில் சிறுவன் Keaton Slater பாடசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளான்.
இந்த வேளையில் Dolars Aleksanders தமது கருப்பு நிற BMW காரால் சிறுவன் மீது மோதியுள்ளான். மட்டுமின்றி, சம்பவயிடத்தில் இருந்து மாயமானதாகவும் தகவல் வெளியானது. தற்போது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அலெக்சாண்டர்ஸ் தேடப்பட்டு வருகிறார்.
விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும்
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அலெக்சாண்டர்ஸைப் பார்க்கும் எவரும் அவரை அணுக வேண்டாம் என்றும், உடனடியாக 999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, சம்பவத்தின் போது அந்த BMW காரில் பயணித்த எவரேனும் இந்த விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று பொலிசார் கோரியுள்ளனர். இதனிடையே, விபத்து தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர் கடுமையாக முயன்றும், சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
தற்போது Dolars Aleksanders-ன் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை அதிகாரிகள் தரப்பு நாடியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |