நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு; குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றதில் 4-வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் 2 முதல் 4 நபர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
எனினும், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 3 பேரும் அப்பாவிகள் என பொலிஸ் கமிஷனர் டெர்மோட் ஷியா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையில் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் ஒருவர் குடும்பத்துடன் தனது குழந்தைக்கு பொம்மைகளை வாங்க வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயம் அடைந்தவர்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அனைவருக்கும் காலில் தான் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் நியூயார்க் உள்ளிட்ட அப்பள முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.