தயவு செய்து இந்த நாட்டுக்கு போகாதீங்க! குடிமக்களை எச்சரிக்கும் அமெரிக்க அரசாங்கம்
சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா அதன் குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அமெரிக்கர்களுக்கு புதிய பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, COVID-19ன் "மிக அதிகமான ஆபத்தை" காரணம் காட்டி சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
தற்போதுள்ள சூழலில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், சிங்கப்பூருக்குச் சென்றால், கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.
Picture: REUTERS/Kevin Mohatt
சிங்கப்பூர் அக்டோபர் 19 செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது. அதன்படி , அமெரிக்காவிலிருந்து வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
இதன்காரணமாக இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு கூட தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பதால், அமேரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், நாட்டின் பரிந்துரைகளையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா தன் மக்களை கேட்டுக்கொண்டது.
USA Today-ன் அறிக்கையின்படி, COVID-19 இன் "அதிகரித்த ஆபத்து" காரணமாக சைப்ரஸ், போலந்து, அங்கோலா, ஹங்கேரி மற்றும் துனிசியாவுக்கான ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறு அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியது.