போர் நிறுத்த அழைப்புகளை கொச்சைப்படுத்துகிறது ஜோ பைடனின் கட்சி! வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசியல் கட்சி, காசாவில் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை கொச்சைப்படுத்துவதன் மூலம், 'பாரிய அரசியல் பிழை' செய்கிறது என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போர்நிறுத்தத்தை ஆதரிக்கும் அமெரிக்கர்கள்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல முக்கிய ஜனநாயகக் கட்சியினர், பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் இராணுவத்திற்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்த நிலைப்பாடு ஜனநாயக அடித்தளத்தை உடைத்துவிட்டதாகவும், மறுபுறம் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
Reuters
கடந்த மாதம் ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் எடுத்த கணக்கெடுப்பில், 68 சதவீதம் பேர் இஸ்ரேல் போர்நிறுத்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நம்பியதாக தெரிய வந்தது.
பாரிய அரசியல் பிழை
இந்த நிலையில் ஜோ பைடனின் அரசியல் கட்சி, காசாவில் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் பாரிய அரசியல் பிழை செய்கிறது என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நவம்பர் மாதம் வாஷிங்டனில் உள்ள ஜனநாயக தேசியக் குழு தலைமையகத்திற்கு வெளியே ஆர்வலர்கள் போர்நிறுத்த போராட்டத்தை நடத்தியபோது, ஆர்ப்பாட்டக்காரர்களை ''பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள்'' என்று ஜனநாயக காங்கிரஸ் உறுப்பினர் பிராட் ஷெர்மன் அழைத்தார். மேலும் அவர், ஆர்வலர்கள் கட்டிடத்தை உடைக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தடுக்க முற்பட்டபோது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை கலைத்தனர்.
Ali Harb/Al Jazeera
இதுகுறித்து Jewish Voice for Peace Action-னின் அரசியல் இயக்குனரான பெத் மில்லர் கூறும்போது, 'போர் நிறுத்த ஆர்வலர்கள் மீதான ஜனநாயகக் கட்சியினரின் தாக்குதல்கள் பரிதாபகரமானது மற்றும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. இதுவும் ஒரு பாரிய அரசியல் பிழை' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |