அமெரிக்காவில் தடுப்பூசி திட்டத்தில் மாற்றம்! இவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட ஒப்புதல்
அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி எனும் கூடுதல் தடுப்பூசிகளைப் போடுவதற்கு சில பிரிவினருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்புமருந்தை பூஸ்டர் தடுப்பூசியாக (3-வது டோஸ்) போட அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
ஆனால், முதலில் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே இந்த கூடுதல் தடுப்பூசி வழங்க அனுமதி அளிப்பதாக அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்தைச் (FDA) சேர்ந்த அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், சுகாதாரப் பிரச்சினைகள் கொண்ட 18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகமுள்ளவர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
முன்னதாகக் கிட்டத்தட்ட அனைத்துப் பெரியவர்களும் 3-வது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிபெற்ற மில்லியன்கணக்கானோர் இன்னும் அதைப் போடாமல் இருக்கின்றனர். அதனால் Booster தடுப்பூசித் திட்டம் முதற்கட்டமாக இந்த அளவில் செயல்படுத்தப்படுகிறது.