ஒபாமா வீட்டில் புற்று நோயால் பறிபோன உயிர்: பெரும் சோகத்தில் குடும்பத்தினர்!
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அவரது குடும்பத்தினரும் புற்றுநோயுடன் போராடி இறந்த தங்கள் வளர்ப்பு நாயின் இழப்பால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2016 வரை இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா, தனது செல்ல நாய் Bo-வின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
Portuguese Water Dog இனத்தைச் சேர்ந்த 'போ'வை, 2008 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்த மறைந்த செனட்டர் எட்வர்ட் எம் கென்னடி, ஒபாமாவின் குடும்பத்திற்கு பரிசாக கொடுத்துள்ளார்.
Today our family lost a true friend and loyal companion. For more than a decade, Bo was a constant, gentle presence in our lives—happy to see us on our good days, our bad days, and everyday in between. pic.twitter.com/qKMNojiu9V
— Barack Obama (@BarackObama) May 8, 2021
மேலும், இரண்டாவதாக 'சன்னி' என்ற நாயும் 2013-ல் ஒபாமாவின் குடும்பத்தில் சேர்ந்தது.
போ மற்றும் சன்னி ஆகிய இரண்டு வளர்ப்பு நாய்களும் வெள்ளை மாளிகைக்கு வருபவர்களிடையே பிரபலமாக இருந்தன. மேலும், அவை இரண்டும் பெரும்பாலும் வருடாந்திர ஈஸ்டர் முட்டை ரோல் போன்ற பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டன.
இந்நிலையில், நீண்ட நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த போ சனிக்கிழமை மாலை இறந்துவிட்டது.
இது குறித்து ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: "இன்று எங்கள் குடும்பம் ஒரு உண்மையான நண்பரையும் விசுவாசமான தோழனையும் இழந்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, போ எங்கள் வாழ்க்கையில் ஒரு நிலையான, மென்மையான பிரசன்னமாக இருந்தார். எங்கள் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என ஒவ்வொரு நாளும் இடையிடையே பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தோம்.
He was exactly what we needed and more than we ever expected. We will miss him dearly. pic.twitter.com/CHweCxwJ7a
— Barack Obama (@BarackObama) May 8, 2021
அவன் வெள்ளை மாளிகையில் இருந்ததால், ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் சகித்துக்கொண்டான், பயங்கரமாக குறைப்பான், ஆனால் யாரையும் கடித்தது இல்லை. கோடையில் நீச்சல் குளத்தில் குதிக்க விரும்புவான், குழந்தைகளுடன் பொருந்தி இருப்பதில் அவனைப் போல யாரும் இல்லை. இரவில் உணவு மேசையைச் சுற்றி சுற்றி வருவான், அழகான முடியுடன் இருப்பான்.
எங்களுக்கு எப்படி வேண்டும் என்றும் நினைத்தோமோ அப்படிஎ இருந்தான், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடந்துகொண்டான்.அவனை இழந்ததற்கு மிகவும் வருந்துகிறோம்" என பதிவிட்டுள்ளார்.