12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி! அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை
இளம் குழந்தைகள் விரைவில் COVID-19 தடுப்பூசிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை ஃபைசர்/பயோஎன்டேக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிராக அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை செலுத்திக்கொள்ள 13 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் தகுதி உண்டு.
இந்நிலையில், சி.என்.என் தொகுத்து வழங்கிய சின்சினாட்டியில் ஒரு தொலைக்காட்சி டவுன் ஹாலில் பேசிய அதிபர் ஜோ பைடன், தற்போது மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு தகுதியற்ற 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஆகஸ்ட் அல்லது அதற்கு பிற்பகுதியில் இலையுதிர்காலத்தில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான தகுதியை பெறலாம் என்று கூறினார்.
அதாவது, இன்னும் சில வாரங்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. இருப்பினும் இது குறித்து FDA மற்றும் CDC இறுதி முடிவை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
CDC அநேகமாக "12 வயதிற்குட்பட்ட அனைவரும் பள்ளியில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்" என்று பரிந்துரைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் COVID-19 வழக்குகள் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.
சி.டி.சி படி, 56.2 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள்.