Apache ஹெலிகொப்டர், Howitzer பீரங்கிகள்..இந்தியாவிற்கு ரூ 4125 கோடி பாதுகாப்பு உதவிக்கு ஒப்புதல்
இந்தியாவிற்கு 4,125 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் கடந்த பத்தாண்டுகளில் ஆயுத விற்பனை, கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு முயற்சிகள் மூலம் இராணுவ உறவுகளைத் தொடர்ந்து ஆழப்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான நிர்வாகம், இந்தியாவிற்கான இரண்டு சாத்தியமான வெளிநாட்டு இராணுவ விற்பனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மொத்தம் 428.2 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.4,125 கோடி) மதிப்பிலான இந்த விற்பனைகள், AH-64E Apache ஹெலிகொப்டர்களுக்கான தொடர் ஆதரவையும், M-777 A2 அதி-எடை குறைந்த Howitzer பீரங்கிகளுக்கான பராமரிப்பு உதவியையும் உள்ளடக்கியுள்ளன.
இதுதொடர்பான அறிக்கை ஒன்றில், "Apache ஹெலிகொப்டர்கள், தொடர் ஆதரவு சேவைகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை இந்திய அரசு வாங்குவதற்காக, சாத்தியமான வெளிநாட்டு இராணுவ விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |