ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், உலக நாடுகள் பலவற்றின்மீது வரிகள் விதிக்கத் துவங்கினார் ட்ரம்ப்.
அமெரிக்காவுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் பல நாடுகளில் அதனால் பதற்றம் உருவானது.
ஆனால், ட்ரம்பின் வரிவிதிப்புகள் முறையற்றவை என்று கூறியுள்ளது அமெரிக்க நீதிமன்றம் ஒன்று.
ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை
அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் ஒன்று ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை விதித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்று, ட்ரம்ப் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதித்த விடயத்தில் தனது அதிகாரத்தை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளது.
அதாவது, இப்படி வரிகள் விதிக்கப்படும்போது, அவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
ஆனால், வரிவிதிப்பு என்பது தேசிய அவசரம் என்றும், அதனால் வரிவிதிக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் ட்ரம்ப் வாதிட்டார்.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் சில அமெரிக்க நிறுவனங்கள், ட்ரம்பின் வரிவிதிப்பை எதிர்த்து வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.
ஆக, நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ’Liberation Day’ என்ற பெயரில் ட்ரம்ப் விதித்த சில வரிகள் செயல்படுத்தப்படாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், வர்த்தக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் துவங்கிவிட்டது.
ஆக, இந்த வழக்கு உச்சநீதிமன்றம் செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால், பிரச்சினை பெரிதாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |