கை, கால்களில் விலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்! அமெரிக்கா கொடுத்த விளக்கம்
சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படியே இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பிவைக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
18,000 இந்தியர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உத்தரவின்படி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுமார் 18,000 இந்தியர்கள் உரிய ஆவணமின்றி அமெரிக்காவில் இருப்பதால், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை ஈடுபட்டுள்ளது.
USBP and partners successfully returned illegal aliens to India, marking the farthest deportation flight yet using military transport. This mission underscores our commitment to enforcing immigration laws and ensuring swift removals.
— Chief Michael W. Banks (@USBPChief) February 5, 2025
If you cross illegally, you will be removed. pic.twitter.com/WW4OWYzWOf
முதற்கட்டமாக 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களின் கை, கால்கள் விலக்கினால் கட்டப்பட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவிற்கு
அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு படைத்தலைவர் மைக்கேல் பேங்ஸ் தனது பதிவில், "USBP மற்றும் கூட்டாளிகள் சட்டவிரோத வெளிநாட்டினரை இந்தியாவிற்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பினர். இது இராணுவ போக்குவரத்தைப் பயன்படுத்தி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட நாடுகடத்தல் விமானமாகும்.
குடியேற்றச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கும் விரைவான வெளியேற்றங்களை உறுதி செய்வதற்கும், எங்கள் உறுதிப்பாட்டை இந்த பணி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நீங்கள் சட்டவிரோதமாகக் கடந்து சென்றால், நீங்கள் அகற்றப்படுவீர்கள்" என தெரிவித்ததும் சர்ச்சையானது.
எனினும், இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பியது, சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படிதான் என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |