ட்ரம்பால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைக் கண்ட அமெரிக்க டொலர்
அமெரிக்க டொலரின் மதிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது.
கடுமையான வரி
கடந்த 1973ஆம் ஆண்டு அமெரிக்க டொலரின் விலை சரிவை கண்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள்தான் டொலரின் சரிவிற்கு காரணம் எனவும் கூறியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் கடுமையான வரிகளை விதித்ததும், உலக விடயங்களில் இருந்து தனிமைப்படுத்தும் கொள்கைகளை பின்பற்றியதும் முக்கிய காரணங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை
இவை தவிர அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அதிகரிப்பு ஆகியவையும் டொலரின் மதிப்பை மேலும் பாதித்துள்ளன. இது வெளிநாட்டினரை அமெரிக்காவில் முதலீடு செய்ய தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பின் நிர்வாகம் அமுல்படுத்திய சில பொருளாதார கொள்கைகளால், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குறைத்தது.
மேலும் வர்த்தகம் செய்ய ஏற்றது என்கிற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சம் இழந்தது. அவரது கொள்கைகளால் வரிகள் அதிகமாக்கப்பட்டதால், பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |