தடுப்பூசி போடுபவர்களுக்கு 100 டொலர் பரிசு! அதிபர் ஜோ பைடன் உத்தரவு
அமெரிக்காவில் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டொலர் பரிசு வழங்குமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நியூயார்க்கில் முதல் டோஸ் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டொலர் பரிசு என்று அந்நகர மேயர் டெ பிளாசியோ அறிவித்திருந்தார். இதனை அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று, அனைத்து மாநிலங்களும், உள்ளூர் அரசாங்கங்களும் தங்களுக்கு கிடைத்த உதவி நிதியைப் பயன்படுத்தி முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைவருக்கும் 100 டொலர்களை பரிசாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இது குறித்து விளக்கம் அளித்த அதிபர் ஜோ பைடன், "நாம் இன்னும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தொடர்ந்துகொண்டு இருக்கிறோம்" என்றார். மேலும் புதிய சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.