ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பெண்ணை சீரழித்துக் கொன்ற வெளிநாட்டவர்: குற்றச்சாட்டுகள் பதிவு...
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பெண்ணை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பெண்கள்
அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டவையாம்.
Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனிக்கு வருகிறார்கள்.
கொடூர நபரிடம் சிக்கிய பெண்கள்
அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Bohling, 31) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி ஈவா மற்றும் கெல்சியை அழைத்துச் சென்றுள்ளார்.
Courtesy Chanidtha Khumpuok
ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும் ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
AFP via Getty Images
கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார்.
Facebook Troy Bohling
இந்நிலையில், தற்போது ட்ராய் மீது ஜேர்மனியில், கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |