கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நபர்! கோவிட்டிற்கு பலியான சோகம்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நபர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் மார்கஸ் லாம்ப். கிறிஸ்தவ மத போதகரான இவர், மதத்தை பரப்புவதற்காகவே தனியாக தொலைக்காட்சி சேனல் ஒன்றை நடத்தி வந்தார்.
அப்போது அவர் தன்னுடைய நிகழ்ச்சிகளில், கொரோனா தடுப்பூசி என்பது உண்மையல்ல, அது ஒரு சோதனை முயற்சி, அபாயகரமானது என்று கூறினார்.
ஆனால், இதை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மறுத்ததுடன், தடுப்பூசி பாதுகாப்பானது, தடுப்பூசி போட்டுக் கொள்வதால் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம். தடுப்பூசி போடாதவர்கள் உயிரிழப்பு என்பது 11 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மார்கஸ் லாம்ப், ரத்தத்தில் சர்க்களை அளவு அதிகரித்ததாலும், ஆக்சிஜன் அளவு குறைந்ததாலும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் உறுதியானது.
அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அவரது மனைவி ஜோனி லாம்ப் அறிவித்தார்.