பொலிஸ் அதிகாரியின் முகத்தை செங்கல்லால் அடித்து உடைத்து, நேரலையில் ஒளிபரப்பிய இளைஞர்! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியை கல்லால் அடித்து, அதனை தனது மொபைல் போன் மூலமாக சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த சம்பவம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.
வாஷிங்டன் மற்றும் மாக்னோலியாவின் மூலையில் அதிகாலை 1 மணியளவில் நின்றுகொண்டிருந்த 2 ஆர்லாண்டோ பொலிஸ் அதிகாரிகள் மீது 27 வயது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த நபரால் லைவ் செய்யப்பட வீடியோவையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில், இரண்டு பொலிஸார் அவர்களது வாகனத்துக்கு அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பின்னாலிருந்து பதுங்கிபதுங்கி சென்ற அந்த நபர், கீழே கிடந்த பெரிய செங்கல் ஒன்றை எடுத்து அதில் ஒரு பொலிஸார் முகத்தில் பலமாக பலமுறை தாக்குவது பதிவாகியுள்ளது.
உடனடியாக பக்கத்தில் இருந்த அதிகாரி தாக்குதல் நடத்தும் நபரை கட்டுப்படுத்த முயற்சித்தார். பிறகு மேலும் இரண்டு பேர் பொலிஸாருக்கு உதவியதை அடுத்து அந்த நபர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விலங்கிடப்பட்டார்.
தாக்குதலுக்கான காரணம் குறித்தது பொலிஸார் வெளியிடவில்லை. அனால், அவரது பெயர் வில்லியம் டி மெக்லிஷ் (William D McClish) என்பதையும், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Picture: Orange County Jail
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு பொலிஸாருக்கு முகத்தில் குறிப்பிடத்தவகையில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றோரு அதிகாரி குற்றம்சாட்டப்பட்டவரால் பலமாக கடிக்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் அவருடையை கண் பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு அந்த தாக்குதல் இருந்ததாகவும் ஆர்லாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மெக்லிஷ் மீது ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை கொலை முயற்சி செய்தல், கொடிய ஆயுதத்துடன் மோசமான தாக்குதல் மற்றும் கைது செய்வதை வன்முறையுடன் எதிர்ப்பது உட்பட பல குற்ற வழக்குகள் பதியப்பட்டு, பெயில் இல்லாமல் ஆரஞ்சு கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.