இந்தியா வம்சாவளி பெண்ணின் வீட்டு வாசலில் துப்பாக்கியுடன் கொலை மிரட்டல்! அமெரிக்கர் கைது
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காங்கிரஸ் அரசியல்வாதியின் வீட்டிற்கு துப்பாக்கியுடன் சென்று கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய-அமெரிக்க காங்கிரஸ் பெண்ணான பிரமிளா ஜெயபாலின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கியுடன் நின்று கொலை மிரட்டல் விடுத்த 48 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை 9-ஆம் திகதி இரவு பிரமிளா ஜெயபாலின் இல்லத்திற்கு வெளியே கையில் துப்பாக்கியுடன் சென்றிருந்த அமெரிக்கர் ஒருவர் "இந்தியாவுக்குத் திரும்பிப் போ, இல்லையெனில் கொலை செய்து விடுவேன்" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.
பின்னர், அவர் பிரட் ஃபோர்செல் (Brett Forsell) என அடையாளம் காணப்பட்ட.நிலையில், ஜூலை 27 புதன்கிழமை அன்று வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்தவுடன் மீண்டும் பிரமிளா ஜெயபால் வீட்டுக்குத் செல்ல வேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிரட் ஃபோர்செல் வழக்குப்பதிவு செய்யப்பட பிறகு, பிரமிளா ஜெயபால் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், மிரட்டல் விடுத்த நபரிடமிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும், தனது ஊழியர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.