மளிகைக் கடை தகராறினால்...அமெரிக்காவில் அரங்கேறிய துப்பாக்கி சூடு: 2 பேர் பலி!
அமெரிக்காவின் மில்வாக்கி(Milwaukee) மாகாணத்தில் உள்ள மளிகைக் கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2பேர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மில்வாக்கி மாகாணத்தில் உள்ள சீசர் சாவேஸ் டிரைவில் இருக்கும் மளிகைக் கடைக்கு அருகே சனிக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுத் தொடர்பாக தி மில்வாக்கி ஜர்னல் சென்டினல் தெரிவித்துள்ள கருத்தில், சனிக்கிழமை காலை 10:20 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம், கடைக்குள் ஏற்பட்ட குழப்பதை தொடர்ந்து அரங்கேறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
கடைக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு சென்ற இரண்டு பாதுகாவலர் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் என மூவரும் சரமாறியாக துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டுள்ளனர்.
இதில் 50 வயது மதிக்கத்தக்க பாதுகாவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என மில்வாக்கி காவல்துறை தெரிவித்தாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனிய தானியங்களை... தீயிட்டு கொளுத்தும் ரஷ்ய படைகள்: பரபரப்பு வீடியோ
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் யார் முதலில் துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் மில்வாக்கி காவல்துறை தெரிவித்துள்ளது.