முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கருப்பினத்தவரை தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளிய பொலிஸ்! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் இரு கால்களையும் நகர்த்த முடியாத முடக்குவாத நோயால் (Paraplegic) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கறுப்பினத்தவரை பொலிஸார் முடியை பிடித்து இழுத்து காரிலிருந்து தரையில் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டேட்டன் நகரத்தில் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் திகதி, கஞ்சா கடத்துவதாக தகவல் வந்ததையடுத்து, பொலிஸார் சந்தேகத்தின்பேரில் ஒரு வெள்ளை நிற ஆடி காரை சாலையில் வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது அந்த காருக்குள் கறுப்பினத்தவரான Clifford Owensby (39) இருந்துள்ளார். அந்த காரின் பின் இருக்கையில் அவரது மகன் இருந்துள்ளார்.
டேட்டன் பொலிஸார், Owensby-யை விசாரிப்பதற்காக காரிலிருந்து கீழே இறங்க சொன்னார்கள். அனால், Owensby "நான் பேராப்லேஜிக்.., என்னால் கீழே இறங்க முடியாதது" என கூறியுள்ளார்.
அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காத பொலிஸார், அவரை கீழே இறங்க சொல்லி வறுபுறுத்தியுள்ளனர். இருப்பினும் அவர் உதவிக்காக தனதுதொலைபேசில் யாரையோ அழைத்துள்ளார்.
அவரிடம் சில முறை கேட்டுப்பார்த்த நிலையில், மூன்று பொலிஸார் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுத்தனர், அதில் ஒரு பொலிஸ் அதிகாரி Owensby-ன் தலை முடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளினார்.
"நீங்கள் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்..," என கதறியபடி அவர் சாலையில் தள்ளப்பட்டார். மேலும் அங்கிருந்து அவரை தரதரவென இழுத்துவந்து போலீஸ் காருக்குள் கொண்டுசென்றனர்.
இந்த காட்சிகளும் மொத்தமாக அங்கிருந்த பொலிஸாரின் சீருடையில் உள்ள கமெராவில் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஓவன்ஸ்பி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓவன்ஸ்பி 2 முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கார் கண்ணாடிகள் டின்ட செய்யப்பட்டிருந்ததாகவும் மற்றும் அவரது மகன் கார் இருக்கையில் அமரவில்லை என்று இருவேறு குற்றச்சட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.
ஆனால், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு ஓவன்ஸ்பி மீது குற்றம் சாட்டப்படவில்லை, என்று ஓவன்ஸ்பியின் வழக்கறிஞர் வில்லிஸ் கூறியுள்ளார்.
ஓவன்ஸ்பியின் பக்கவாதம் பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று கூறிய வில்லிஸ், எனது கட்சிக்காரர் ஆயிரக்கணக்கான டொலர்களை ரொக்கமாக வைத்திருப்பது குற்றம் அல்ல என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, கறுப்பினத்தனர் தாக்கப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

