பெண்ணை சுட்டுக்கொன்ற 81 வயது முதியவர்! கமெராவில் பதிவான அதிர்ச்சி காட்சி
அமெரிக்காவில் முதியவர் ஒருவர் பெண் உபேர் சாரதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெற்கு சார்லஸ்டன் நகரைச் சேர்ந்த முதியவர் வில்லியம் பிராக் (81). இவரது வீட்டிற்கு லெதா ஹால் (61) என்ற உபேர் பெண் சாரதி ஒருவர் வந்துள்ளார்.
அவர் பிராக்கின் வீட்டில் இருந்து ஒரு Packageஐ எடுத்துச் செல்ல தகவல் வந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், அப்பெண்ணைக் கண்டு பயந்த பிராக், உன்னை அனுப்பியது யார் என்று கேட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார்.
பின்னர் தன்னை லெதா தாக்கப்போகிறார் என்று பயந்த அவர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சாரதியை சுட்டுள்ளார். உடனே தனது காருக்கு திரும்ப முயன்ற லெதாவை திரும்பவும் உடலின் பல இடங்களில் சுட்டுள்ளார் பிராக்.
இச்சம்பவம் கடந்த மார்ச் 25ஆம் திகதி நடந்துள்ளது. லெதா ஹால் காரில் இருந்து கமெராவில் இந்த அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியிருந்தன.
ஹால் தாக்கியதில் தலை, காதில் காயமடைந்த பிராக், அவரை சுட்ட பின்னர் அவசர உதவியை அழைத்துள்ளார். இதனையடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட லெதா ஹால், அங்கு சிகிச்சையின்போது உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணம் கேட்டு மோசடி செய்பவர்களிடம் இருந்து தனக்கு போன் அழைப்புகள் வந்ததாகவும், ஹால் தனது பணத்தை எடுக்க வந்ததாக நினைத்து சுட்டுக் கொன்றதாகவும் வில்லியம் பிராக் தனது வாக்குமூலத்தில் கூறினார். அத்துடன் ஹால் துப்பாக்கியை எடுக்கப்போகிறார் என நினைத்து அவரை சுட்டதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |