உடனே இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! தூதரக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா உத்தரவு
ஐரோப்பிய நாடான உக்ரைனில் உள்ள தூதரக ஊழியர்களின் குடும்பத்தினர் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால் அமெரிக்கா இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற தூதரக ஊழியர்களும் மற்றும் அமெரிக்க குடிமக்களும் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் திறந்திருக்கும், ஆனால் எந்த நேரத்திலும் ரஷ்யா படையெடுக்கலாம்.
தற்போதைய பதற்றம் மற்றும் அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்கு சாத்தியம் இருப்பதன் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு மக்கள் பயணிக்க வேண்டாம் என்றும் அமெரிக்கா வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
எந்நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்கலாம், அத்தகைய ஈக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றும் நிலையில் அமெரிக்க அரசாங்கம் இருக்காது.
முன்னெச்சரிக்கையாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.