இலங்கைக்கு உதவி செய்யும் அமெரிக்கா! என்ன தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
உலக அளவில் 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா பகிர்ந்து அளிப்பதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் தற்போது கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் அண்டை நாடுகளின் உதவிகளை அனைத்து நாடுகளும் கோரியுள்ளன.
அதே போன்று உலக முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் அவசர தேவைக்காக கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று அமெரிக்காவின் உதவியை நாடியிருந்தது. இதில் இலங்கையையும் தனது அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காக, AstraZeneca தடுப்பூசி 600,000-ம் கேட்டிருந்தது.
இதையடுத்து தற்போது அமெரிக்கா தங்களிடம் உதவி கேட்ட நாடுகளுக்கு உதவி செய்யும் நோக்கில், முதல் பகுதியாக 25 மில்லியன் தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா இலங்கையை தேர்வு செய்கிறது 25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா இலங்கையையும் மற்ற நாடுகளையும் தேர்வு செய்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நாங்கள் வழங்கப்படும் இந்த தடுப்பூசிகள் மற்ற நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறவோ அல்லது சலுகைகளைப் பெறவோ அல்ல. உயிரைக் காப்பாற்றுவதற்கும், இந்த தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மட்டுமே, என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
வழங்கப்படும் 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள், இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான் மற்றும் பசிபிக் தீவுகளுக்கு பகிரிந்தளிக்கப்படவுள்ளது.