தன் வாழ்வைத் தானே முடித்துக்கொள்ள முடிவு செய்த அமெரிக்க ஜனாதிபதி: இதுவரை உலகுக்குத் தெரியாத ஒரு முகம்
ட்ரம்புடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது யார் இந்த மனிதர் என பார்த்த உலகம், அவர் வெற்றி பெற்றதும் வியப்படைந்தது.
ஆனால், அவரது வயது காரணமாக, அவர் அடிக்கடி பல பெயர்களை மறந்தபோதும், விமானப்படிகளில் ஏறும்போதும் அடிக்கடி தவறி விழப்பார்த்தபோதும் உலகின் பார்வை மாறி, ஒரு பக்கம் பதற்றத்துடனும், மறுபக்கம் சற்றே அவமரியாதையுடன் அந்த மனிதரைப் பார்க்கத் துவங்கியது.
ஆனால், அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதைக் காட்டியுள்ளது, சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று.
அந்த நபர், அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடன்!
தன் வாழ்வைத் தானே முடித்துக்கொள்ள முடிவு செய்த ஜோ பைடன்
ஆம், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், தன் வாழ்வைத் தானே முடித்துக்கொள்ள யோசித்தது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
Delaware Memorial Bridge என்னும் பாலத்திலிருந்து குதித்து, தன் வாழ்வைத் தானே முடித்துக்கொள்ள ஒரு முறை திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார் பைடன்.
தனது முதல் மனைவியான Neilia Hunter மரணமடைந்தபோதுதான், அப்படியொரு முடிவெடுத்தாராம் பைடன்.
Neilia, தன் மூன்று பிள்ளைகளுடன் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு வாகனத்துடன் அவரது கார் மோத, Neiliaவும், தம்பதியரின் மகளான Naomiயும் அந்த விபத்தில் பலியாகியுள்ளார்கள். அப்போது Neiliaவுக்கு வயது வெறும் 30தான்.
அந்த இளம் வயதில் தன் மனைவியை இழந்ததால் கடும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளான பைடன், நன்றாகக் குடித்துவிட்டு, Delaware Memorial Bridge என்னும் பாலத்திலிருந்து குதித்து, தன் வாழ்வைத் தானே முடித்துக்கொள்ள ஒரு முறை திட்டமிட்டுள்ளார்.
ஆனால், எனக்கு இன்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே என்று கூறும் பைடன், அவர்களுக்காகத்தான் தன் வாழ்வைத் தானே முடித்துக்கொள்ளும் திட்டத்தைக் கைவிட்டாராம்.
ஜோ பைடனுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மனைவி மீதான அன்பும், பிள்ளைககள் மீதான பாசமுமாக, இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ள பைடன் மீது, மரியாதை அதிகரிக்கத்தான் செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |