அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல்! வீடியோ வைரலானதால் பரபரப்பு
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அங்கு வாழும் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஜனவரி 5-ஆம் திகதி நியூயார்க் நகரத்தில் உள்ள John F Kennedy விமான நிலையத்தில், டாக்ஸி ஓட்டுநரான சீக்கியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், சீக்கிய வண்டி ஓட்டுனரின் முகத்தின் மீது ஒருவர் பலமுறை குத்துவதைக் காணமுடிகிறது. அவரைத் தாக்கியாது மட்டுமின்றி அவரது தலைப்பாகையையும் (Turban) கழற்றப்பட்டது. மேலும், தாக்குதல்தாரி சீக்கியருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இந்த வீடியோ அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
It’s not enough to say that we need to fight AAPI hate. We actually need our elected officials to get involved with consequences for those who commit acts of violence against our community. @GregMeeksNYC @NYCMayor @AdrienneToYou @yuhline @rontkim pic.twitter.com/Dkk23lQw0g
— Navjot Pal Kaur (@navjotpkaur) January 4, 2022
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் குறித்து பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, சீக்கிய டாக்ஸி ஓட்டுனர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் "ஆழ்ந்த கவலையளிக்கிறது" என்று அமெரிக்கா பதிலளித்தது.
"நியூயார்க்கில் சீக்கிய டாக்சி ஓட்டுநருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கவலையளிக்கிறது. நாங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டு, இந்த வன்முறைச் சம்பவத்தை விசாரிக்கும்படி வலியுறுத்தினோம்" என்று நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
"சீக்கியர்கள் அல்லாதவர்களுக்கு, உங்கள் தலைப்பாகையை கழற்றுவது - அல்லது வேறொருவரின் தலைப்பாகையைத் தட்டுவதைப் பார்ப்பது என்றால் என்ன என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது உள்ளுறுப்பு மற்றும் குடலைப் பிடுங்குகிறது, சாட்சியமளிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது," ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் இன்க்ளூசிவ் அமெரிக்கா திட்டத்தின் (Aspen Institute's Inclusive America Project) ஆசிரியரும் இயக்குநருமான சிம்ரன் ஜீத் சிங் (Simran Jeet Singh) ட்வீட் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் (Bureau of South and Central Asian Affairs) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) நியூயார்க் நகரத்தில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் சீக்கிய வண்டி ஓட்டுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் அறிக்கைகளால் "ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது" என்று கூறியது.
"கடந்த வாரம் ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் சீக்கிய வண்டி ஓட்டுனர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். எங்கள் பன்முகத்தன்மை அமெரிக்காவை வலிமையாக்குகிறது, மேலும் எந்த வித வெறுப்பு அடிப்படையிலான வன்முறையையும் நாங்கள் கண்டிக்கிறோம்," அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளது.