சவப்பெட்டிக்குள் எட்டி பார்த்த சகோதரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி... தாயின் உடையுடன் இருந்த வேறு உடல்!
அமெரிக்காவில் இறந்து போன தாயை புதைப்பதற்காக வைத்திருந்த சவப்பெட்டிக்குள் வேறு ஒருவரின் உடல் இருப்பதை கண்டு இரண்டு சகோதரதாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்கா நகரில் உள்ள வட கரோலினா பகுதியில் ஜெனிபர் டெய்லர் மற்றும் ஜென்னெட்டா ஆர்ச்சர் என இரண்டு சகோதரிகள் தனது தாய் மேரியுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மேரி கடந்த மாதம் உடல் சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து இரண்டு சகோதரிகளும் தங்கள் தாயை புதைப்பதற்காக அஹோஸ்கி சவ அடக்க இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது மேரியை புதைப்பதற்காக வைத்திருந்த சவப்பெட்டிக்குள் அவர்களின் தாயாரின் உடையில் வேறு ஒருவரின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஜெனிபர் டெய்லர் கூறுகையில், இது எப்படி நடந்திருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதில் இருந்த நபருக்கும் எங்கள் அம்மாவுக்கும் எந்த வித ஒற்றுமையும் இல்லை.
அவரை என் தாயுடன் ஒப்பிடும் போது மிக சிறியவர் என்பதால் என்னால் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடலை உடனே மாற்றி தந்துவிட்டார்கள். இருப்பினும் இந்த வேலை எதற்கு நடந்தது என்பது தெரியவில்லை என சந்தேகத்துடன் கூறியுள்ளனர்.