ஹொட்டல் சமையலறையில் உடல் உறைந்த இளம் பெண் சடலம்... ரூ 50 கோடி இழப்பீடு பெற்ற குடும்பம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரபல ஹொட்டல் ஒன்றின் சமையலறையில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், குறித்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
சமையலறையின் Freezer-ல்
சிகாகோ பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஹொட்டல் ஒன்றில் பயன்பாடில் இல்லாத சமையலறையின் Freezer-ல் குறித்த இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
@ap
2017 செப்டம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்திற்கு எதிராக, மரணமடைந்த 19 வயது Kenneka Jenkins குடும்பம் நீதிமன்ற விசாரணையை முன்னெடுப்பதில் உறுதியாக இருந்த நிலையில், தற்போது இழப்பீடு அளிப்பதாக அந்த ஹொட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சம்பவத்தன்று Kenneka Jenkins மற்றும் அவரது நண்பர்கள் சிலர் இரவு நேர பார்ட்டிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு Kenneka Jenkins மாயமானதாக கூறி, தாயார் தெரேசா மார்ட்டினுக்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர்.
தமது மகள் தொடர்பில் ஹொட்டல் ஊழியர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை காணவில்லை என்று பொலிசாரிடம் புகார் அளித்தனர்.
@getty
இதனையடுத்து மதியம் 1 மணிக்கு இளம் பெண் மாயமாகியுள்ளதாக கூறி ரோஸ்மாண்ட் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். சுமார் 24 மணி நேரத்திற்கு பின்னர் அந்த ஹொட்டலின் பயன்பாட்டில் இல்லாத சமையல் அறை Freezer-ல் இருந்து Kenneka Jenkins சடலமாக மீட்கப்பட்டார்.
10 மில்லியன் டொலர் இழப்பீடு
பரிசோதனையில், அவர் மது அருந்தியிருந்ததும் வலிப்பு மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தும் மருந்து உட்கொண்டிருந்ததும் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில், 2018ல் தமது மகளின் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு, அந்த ஹொட்டலுக்கு எதிராக தெரேசா மார்ட்டின் வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன், தங்களுக்கு 50 மில்லியன் டொலர் தொகையை இழப்பீடாக வழங்கவும் அவர் கோரியிருந்தார்.
@dailymail
பயன்பாட்டில் இல்லாத போதும் சமையலறை Freezer-ஐ ஊழியர்கள் முறையாக பாதுகாக்க தவறியதாக குறிப்பிட்டும், தமது மகள் மாயமானதாக புகார் அளித்தும், உரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்க தவறியதாகவும் குறிப்பிட்டு இழப்பீடு கோரியிருந்தார்.
தற்போது இந்த விவகாரத்தில் மொத்தம் 10 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 3.5 மில்லியன் டொலர் சட்ட ஆலோசனைக்கான கட்டணமாகவும், 6 மில்லியன் டொலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ 50 கோடி தெரேசா மார்ட்டின் உட்பட மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹொட்டல் ஊழியர்கள் கண்காணிப்பு கமெராவை பரிசோதித்திருந்தால், இளம் பெண் உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும், அவர் ஹொட்டல் சமையலறைக்குள் நுழைவதை ஊழியர்களால் அடையாளம் கண்டிருக்க முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |