8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்

Crime Child Abuse Texas Kayla Keyontae
By Ragavan Jun 21, 2021 01:28 PM GMT
Report

அமெரிக்காவில் ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மகன் இறந்துகொண்டிருந்த நேரத்தில், தாய் உடலுறவில் பிசியாக இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் கடந்த மார்ச் 23-ஆம் திகதி Keyontae Holzendorf எனும் 8 வயது சிறுவன் இறந்து கிடந்தான்.

தகவல் கொடுக்கப்பட்டு ஹோட்டலுக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் இறந்துகிடந்த சிறுவனின் உடலை பார்த்துள்ளனர். அவனது தலை, கழுத்து, வயிறு என உடல் முழுவதும் பல இடங்களில் பட்டை பட்டையாக பெல்ட்டால் அடிக்கப்பட்ட மற்றும் கடுமையான காயங்கள் காணப்பட்டன.

அதே ஹோட்டல் அறையில் இருந்த சிறுவனின் தாய் Kayla Holzendorf-யிடம் மகனின் மரணம் குறித்து விசாரிக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என அவர் கூறினார்.

8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம் | Us Texas Mother Having Sex Son Kayla Keyontae

அதன் பிறகு, சந்தேகத்தின் அடிப்படையில் Kayla-வை கைது செய்தனர். அதே அறையில் இருந்த அவருடைய காதலன் (common-law partner) Dominique Lewis என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

பிறகு சிறுவனின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைத்த பொலிஸார், சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் சிறுவனின் மருத்துவ சோதனை முடிவுகள் வெளியானது. அதில் சிறுவனின் பற்கள் உடைக்கப்பட்டு, கணுக்கால்களில் பல முறை அடிக்கப்பட்டு, உடலில் அங்கங்கு மேல்தோல் இல்லாமல் பயங்கரமாக துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், Kayla-வை விசாரிக்கும்போது அவர் கொடுத்த பதில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் தனது மகனை குளிக்க அனுப்பிவைத்ததாகவும், அதன் பின்னர் அவர் தனது காதலன் Dominique-உடன் தனியறையில் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

8 வயது மகன் சாகும் நேரத்தில் காதலனுடன் உறவில் இருந்தேன்: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம் | Us Texas Mother Having Sex Son Kayla Keyontae

பிறகு வந்து பார்க்கும்போது மகன் இறந்து கிடந்ததாகவும், வேறு எதுவும் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும், மகனின் உடலில் இருந்த காயங்கள் குறித்து கேட்டபோது, அது அவன் சைக்கிள் ஒட்டி பழகும்போது கீழே விழுந்து அடிபட்ட காயங்கள் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு டெக்சாஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுவனின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை கூடிய விரைவில் வெளிக்கொண்டுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US