உக்ரைனில் இருந்து அமெரிக்க தூதரகம் வெளியேற்றம்? அதிகரிக்கும் போர் பதற்றம்
உக்ரைனுக்கு எதிராக விரைவில் ரஷ்யா போர்தொடுக்கும் என மேற்குநாட்டு புலனாய்வு பிரிவு தெரிவித்ததை தொடர்ந்து, உக்ரைனின் கிளிவ் பகுதியில் உள்ள தங்கள் தூதரகத்தை அமெரிக்கா வெளியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து தூதரக அதிகாரிகளின் குடும்பங்கள் மற்றும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு இருந்தார். அதே சமயத்தில் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவது அவர்களது விருப்பத்திற்கு விடப்பட்டது.
இந்த நிலையில் ரஷ்யா விரைவில் உக்ரைனுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அமெரிக்கா தங்கள் தூதரக அதிகாரிகளை கிளிவ் இருந்து வெளியேற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உக்ரைனின் கிளிவ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரத்தை வெளியேற்றிவிட்டு, சில முக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மட்டும் கடைமேற்கு பகுதியான போலந்தின் எல்லைப்பகுதிகளில் நியமிக்க உள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புகள் உக்ரைனுடன் ராஜதந்திர உறவை தொடர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை சில பெயர் குறிப்பிடாத மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வழங்கமுடியாத அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏற்கனவே 1700 படைத்துருப்புகளை அனுப்பியிருந்த நிலையில் மேலும் 3000 படைத்துருப்புகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.