எல்லைகளை மீண்டும் திறக்கும் அமெரிக்கா! யாருக்கெல்லாம் அனுமதி?
கனடா மற்றும் மெக்ஸிகோ உடனான எல்லைகளை மீண்டும் திறப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நவம்பர் மாதத்திலிருந்து கனடா மற்றும் மெக்ஸிகோ உடனான சாலை மற்றும் நீர்வழி எல்லைகளை மீண்டும் திறப்பதாகவும், முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகள் மட்டுமே நாட்டிற்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அமெரிக்க அறிவித்துள்ளது.
தடுப்பூசி போடாத பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதேசமயம் பயணிகள், கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சோதனை முடிவை காட்டி விமானம் மூலம் கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்கா பயணிக்கலாம்.
2022 ஜனவரி முதல் கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்கா வரும் பயணிகள் கட்டாயமாக தடுப்பூசி போட்டதற்கான ஆதராத்தை கட்ட வேண்டும் உள்துறை பாதுகாப்பு செயலாளர் Alejandro Mayorkas தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக 2020 மார்ச் மாதத்திலிருந்து அண்டை நாடுகளான மெஸிக்கோ மற்றும் கனடா உடனான போக்குவரத்தை அமெரிக்கா துண்டித்தது குறிப்பிடத்தக்கது.