ஜேர்மனி தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்
கோடையை ஒட்டி, ஜேர்மனிக்கு பயணிப்பது தொடர்பில் அமெரிக்காவும் கனடாவும் தத்தம் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
பயண எச்சரிக்கை
மே மாதம் அமெரிக்கா விடுத்த பயண ஆலோசனையில், அதிக கவனத்துடன் ஜேர்மனிக்கு பயணிக்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
பொது இடங்களில் எதிர்பாராமல் தாக்குதல்கள் நடக்கலாம், தீவிரவாத தாக்குதல் கூட நடக்கலாம் என்னும் அடிப்படையில் அந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல, கனடாவும், தீவிரவாதம் குறித்த கவலை காரணமாக, ஜேர்மனிக்கு பயணிக்கும் கனேடியர்கள் மிக அதிக கவனத்துடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவும், ஜேர்மனியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முயற்சிக்கவும், தாக்குதல் நடத்தவும் அதிக வாய்ப்புள்ளதாகவும், அதனால், பிரித்தானியர்கள் கவனத்துடன் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |